"தமிழகத்தில் உள்ள, 160 ஊர் புற நூலகங்களை, கிளை நூலகங்களாக
தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது," என அமைச்சர் முனுசாமி
தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா
நடந்தது. டி.ஆர்.ஓ., பிரகாசம் தலைமை வகித்தார். இதையொட்டி நடந்த கட்டுரை
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர்
முனுசாமி பேசியது:
தமிழகத்தில் உள்ள, 160 ஊர் புற நூலகங்களை கிளை
நூலகங்களாகவும், 96 பகுதி நேர நூலகங்களை ஊர்புற நூலகங்களாகவும், 96 ஊர் புற
நூலகங்களை மூன்றாம் நிலை நூலகங்களாகவும் தரம் உயர்த்த தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
நூலகத்துறையில் நடப்பாண்டில் மட்டும் ஆயிரத்து, 93 பேருக்கு புதியதாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு மைய நூலகம், 28 கிளை நூலகம்,
67 ஊர்புற நூலகம் மற்றும் 20 பகுதி நேர நூலகங்கள் சேர்த்து மொத்தம், 116
நூலகங்கள் உள்ளது. இந்த நூலகங்களில் நாளிதழ், பருவ இதழ், குழந்தைகள்
பிரிவு, மூத்த குடிமக்கள் பிரிவு, குடிமைப்பணி பிரிவு, இணையதளபிரிவு என
மொத்தம், 9 லட்சத்து 38 ஆயிரத்து 742 நூல்கள் இருப்பில் உள்ளன.
ஆண்டுக்கு சராசரியாக, 14 லட்சத்து, 13 ஆயிரத்து, 781 பேர்
நூலகத்திற்கு வருகின்றனர். நூலகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து,
781 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆயிரத்து, 273 பேர் புரவலர்களாக உள்ளனர்.
நூலகத்தில் உள்ள அரிய வகை நூல்களை படித்து பொது அறிவை வளர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment